கிழக்கிலங்கையின் கரையோரக் கிராமம் பாண்டிருப்பில் பிறந்தார். தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பேர்களின் முதலெழுத்துக்களை இணைத்து உமா வரதராஜனானார்.
ஈழத்தின் இலக்கியச் சிற்றிதழ்களில் ஆசிரியராகவும், ரூபவாஹினி தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.
கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டிருந்தாலும் முதன்மையாக சிறுகதையாசிரியராகவே அறியப் படுகின்றார்.
'உள்மன யாத்திரை (1989)' நூல் இலங்கை வடகிழக்கு மாகாணசபை விருது பெற்றது.
இவரது சில சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், சிங்கள மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.
'மூன்றாம் சிலுவை' இவரது முதல் நாவல். சிங்கர் (ஸ்ரீ லங்கா) நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியாக பணியாற்றினார்.